தஞ்சாவூரில் செயற்கை கை, கால், முழங்கை,  மற்றும் வீல்சேர் வழங்கும் முகாம். பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் மற்றும்  பி எம் வி எஸ் எஸ் சார்பில் வழங்கப்பட்டது

10

தஞ்சாவூர் மாவட்டத்தில் விபத்துகள் மற்றும்  சர்க்கரை நோய்களால் கால்களை இழந்தவர்களும்,  போலியோவால் பாதிக்கப்பட்டோர், பிறவி குறைபாடு உடையோர் என அவர்களுக்கு தேவையான  செயற்கை உறுப்பு கருவிகளை  அளவு எடுத்து தரமாக தயாரித்து உடனடியாக வழங்கப்பட்டது,பெரியார் மணியம்மை பல்கலை கழகத்தின் சமூக நலன் திட்டம்,,  ஜெய்ப்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய மாற்றுத்திறனாளிகள் சேவை அமைப்பான ஸ்ரீ பகுவான்  மகாவீர் விக்லங் சகாயட்டா சமிட்டி இணைந்து சுமார்  700 பேருக்கு கை,கால் இழந்தவர்கள் இயல்பாக நடக்கவும், அன்றாட பணிகளை செய்யவும் இக்கருவிகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமச்சந்திரன், பதிவாளர் ஸ்ரீவித்யா, இணை துணை வேந்தர் மல்லிகா, ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, பி எம் வி எஸ் எஸ் நிர்வாகி  பிரகரத்தி மேத்தா  உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர்