அவசரநிலை சிகிச்சை நேர்வுகளில் இதயநாள நோய்களே மூன்றில் ஒரு பங்கு உள்ளது, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை தகவல்

3

உலக அவசரநிலை மருத்துவ தினம்
ஆண்டுதோறும் மே 27 அன்று அனுசரிக்கப்படுகிறது, இதையடுத்து மீனாட்சி மருத்துவமனை டாக்டர் சரவணவேல், கூறுகையில்,ஒவ்வொரு மாதமும் சுமார் 1,400 அவசரநிலை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கையாள்கிறது. இவற்றில் பெரும்பான்மை இதயம் தொடர்பான பிரச்சனைகளாகவும் மற்றும் விபத்துகள் காரணமாக ஏற்படும் காயங்களாகவும் இருக்கின்றன,உரிய நேரத்தில் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும், ஆரம்ப நிலையிலேயே தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதன் மூலமும் இதயம் தொடர்பான அவசரச் சிக்கல்களை 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு தவிர்க்க முடியும் என்று கூறினார், இதில் மருத்துவமனை துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர்கள் பிரவீன், ஆசிக் மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர்