Home தமிழ்நாடு தஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.

தஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.

4043

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற தமிழ்த்தொடரை இடம்பெறச் செய்தவரும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் 30 ஆண்டுகாலம் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் மாணவர் நலனுக்கும் பாடுபட்டு தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தமிழறிஞர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்தம் மாணாக்கர்கள் ஒன்றிணைந்து முழுஉருவ வெண்கலச்சிலையை எதிர்வரும் 21.02.2021 அன்று நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி வளாகத்தில் திறக்கப்பட உள்ளனர், ஐயாவிடம் பயின்ற மாணவர்கள் தங்கள் நினைவலைகள், கவிதை, கட்டுரை,சிறுகதை,கவிதை,ஓவியம்,துணுக்குகள் போன்ற இலக்கிய படைப்புகளை munaivarsumadhavan@gmail.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம், பேராசிரியர் பி.வி விழுதுகள் ஒன்றிணைய இச்செய்தியை தங்களுடன் பயின்ற நண்பர்களுக்கும் பகிரவும், மேலும் தொடர்புக்கு: குணசேகரன் இணை இயக்குநர்(ப.நி) செயலாளர், சிலை அமைப்புக்குழு தொடர்பு எண்: 9443153122, 9791354277

error: Content is protected !!