தஞ்சாவூரில் அதிநவீன எண்டோஸ்கோப்பி மூலம் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை,  மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரம்

2

முதுகுத்தண்டில் ஏற்பட்ட பெரிய வீக்கம் காரணமாக 40 வயது தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளருக்கு ‘கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்’ என்ற பாதிப்பினால் கடுமையான வலியும், நடப்பதில் சிரமமும்  ஏற்பட்டது.
‘யூனிலேட்டரல் பைபோர்ட்டல் எண்டோஸ்கோப்பிக் சர்ஜரி’ (UBE) என்பது, ஊசித்துளை மூலம் செய்யப்படும் ஒரு நவீன முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையாகும். சிறிய துளைகள் மூலம் நரம்பு அழுத்தத்தை நீக்கி, தசை பாதிப்பையும், ரத்த இழப்பையும் குறைக்கும்  இந்த சிகிச்சையினால் நோயாளி விரைவாக குணமடைய முடியும்,மீனாட்சி மருத்துவமனையால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த UBE முறை, நரம்பை அழுத்தும் முதுகுத்தண்டு வட்டை அகற்றுவதற்கு குறைந்த ஊடுருவல் உள்ள ஒரு நவீன அறுவை சிகிச்சை ஆகும்,இதுவரை சுமார் 50 UBE அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் தலைமையிலான குழுவில் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அரி மாணிக்கம், எலும்பியல் ஆலோசகர் டாக்டர் சண்முக ஹரிஹரன் குழுவால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது,