Home Blog
ரெட் சிண்ட்ரோம் எனும் அரிதான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிக்கலும் இடரும் மிகுந்த இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிகிச்சை நடைபெற்றபோதே இண்ட்ரா ஆபரேடிவ் நியூரோ மானிட்டரிங்  என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியின் முதுகுத் தண்டுவடம், நரம்புகள் செயல்பாட்டைக் கண்காணித்து பாதுகாப்பான, துல்லியமான சிகிச்சையை உறுதி செய்தனர். ஸ்கோலியாசிஸ் என்பது, அசாதாரணமான நிலையில் முதுகுத்தண்டுவடம் வளைந்த பிரச்சனை அகும். அதேபோல ரெட் சிண்ட்ரோம் என்பது பெண் குழந்தைகளைத்...
டெல்டா பிராந்தியத்தில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது. 37 வயதுள்ள ஒரு நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து தானமாகப் பெற்ற சிறுநீரகத்தைக் கொண்டு இச்சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ்  NABH - ன் அங்கீகாரம் பெற்றிருக்கும் இந்த  மருத்துவமனையில் செய்த முதல் சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சை இது என்ற பெருமையையும் இதன் மூலம் இம்மருத்துவமனை பெற்றிருக்கிறது....
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் உள்ள பாரத் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர், இக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவாக, தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா கீற்றால் பின்னப்பட்ட குடிசை வீட்டை அமைத்து, தென்னை ஓலைகள் கட்டி,  வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணம் கட்டி, கிராமத்தையே கல்லூரி வளாகத்தில் அமைத்து கல்லூரி மாணவிகள் சேலை அணிந்தும், மாணவர்கள் வேஷ்டி,சட்டை அணிந்தும் பாரம்பரிய உடையில் வந்தனர்,...
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் புதிய பாதை என்ற தன்னம்பிக்கையூட்டும் வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர் முகமது எஹியா, வீரக்குறிச்சி மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் அருள் சூசை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மதர் தெரசா கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் நலிவுற்ற குடும்பத்தை சேர்ந்த 31 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 3 லட்சத்திற்கான கல்வி உதவித் தொகையும், சுயதொழில் செய்வதற்கு ...
அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37வது ஆண்டு நினைவு தினம் அதிமுக கட்சி மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் அனுசரிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பின்னர் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது, இதில் அதிமுக மாவட்ட செயலாளர் சேகர்,  முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாநகர செயலாளர் சரவணன், கவுன்சிலர்கள் கோபால், கேசவன், தெட்சிணாமூர்த்தி, வார்டு செயலாளர் சம்பத் உள்ளிட்ட  அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்...
தஞ்சாவூர் நவ பாரத் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி புதிய அறிவியல் படைப்புகளை உருவாக்கும் விதத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.பள்ளியின் அனைத்து பிரிவு மாணாக்கர்களும் 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிபடுத்தி இருந்தனர். தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலிருந்து 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ. மாணவிகள் தங்களது பெற்றோருடன் கண்காட்சியை கண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன். நிர்வாக அலுவலர் குணாசிங் ஆண்டனிராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
திமுக கட்சியின் காப்பாளர்களுக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பெயரிலும், 2018 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, திமுக தனது 75 ஆவது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் வகையில் கட்சியை ஆறாவது முறையாக ஆட்சியில் அமர வைத்து இந்தியாவே போற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு ...
தஞ்சாவூரில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் தஞ்சை சீனிவாசபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது, இந்த விளையாட்டு அரங்கினை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திறந்து வைத்தார், மேலும் ஆடுகளத்தினை மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தொழிலதிபர் ஆசிப் அலி ஆகியோர் திறந்து வைத்தனர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுப்ரமணிய சர்மா, கருப்பையா, ஜெய் சதீஷ், முரளிதரன், பாஸ்கரன், வெங்கடேஷ், சரவணன், குலோத்துங்கன், மகேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை ரஜினி கணேசன், ஆடிட்டர்  ரவிச்சந்திரன், அன்பழகன்...
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன, மேலும் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது, இதனையடுத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் காவல்துறையினருடன் இணைந்து அண்ணாசாலை பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன...
டெல்டாவில் மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, அகில இந்திய மருத்துவமனைகளின் சங்கம் (AHPI) நிறுவிய சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான விருதை, மருத்துவ சேவைத் துறையில் சுற்றுச்சூழல் மற்றும் நிதி நிலைத் தன்மையை மையமாகக் கொண்ட ஒரு நாள் மாநாடு மற்றும் கண்காட்சியான AHPICON 2024-இல் பெற்றுள்ளது,தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் சிறந்து விளங்குவதற்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அளவிலான 15 மருத்துவமனைகளை, AHPICON 2024 அங்கீகரித்துள்ளது, இந்த விருதினை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவின் தலைவர்...

Our Visitor

033550
Users Today : 0
Users Yesterday : 1
Total Users : 33550
Views Today :
Views Yesterday : 1
Total views : 63772
Who's Online : 0
error: Content is protected !!