தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, முழுமையாக இரண்டு ஆண்டுகள் முடியாத நிலையில் திமுக ஆட்சி எப்போது செல்லும் என்று மக்கள் கேட்கின்றனர்,அதிமுக ஆட்சியை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், திமுக எதிர்க்கட்சி, திமுகவை எதிர்த்து தான் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார், எதிர்க்கட்சி திமுக என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார், ஆனால் ஓபிஎஸ் போல் கும்பிடு போட்டு கொண்டு இருக்க மாட்டார், உறுதியான தலைவராக இபிஎஸ் உள்ளதால் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் இணைகிறவர்களை இணைப்பதற்காக மே மாதம் 4 ந் தேதி ஒரத்தநாட்டில் இபிஎஸ் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றும் அதிமுக இபிஎஸ் தலைமையில் தான் உள்ளது, தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது, இந்நிலையில் ஓபிஎஸ் கட்சி கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்துவோம் என்று தெரிவிப்பது நியாயத்திற்கும் தர்மத்திற்கும் புறம்பானது, சட்டரீதியாக அதை சந்திப்போம், அதிமுக கட்சியின் சின்னத்தையும் கொடியையும் வேறு யாரேனும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார், மேலும் ஓபிஎஸ்-ன் நிலைப்பாடு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுப்பவர், ஒரே நிலைப்பாடு கொண்டவர் இல்லை என்றும் அதிமுக ஆட்சியை பற்றி குறைவாக பேசியவர்கள் இன்றைக்கு எல்லா மக்களாலும் பேசப்படுகிறார்கள், நடவடிக்கை இல்லை, மக்களுக்கு தேவையான எதையும் செய்யவில்லை என்று திமுகவை குற்றம் சாட்டினார், முன்னதாக அதிமுக கட்சியில் பல்வேறு உறுப்பினர்கள் இணைந்தனர், இக்கூட்டத்தில் அவைத்தலைவர் திருஞானசம்பந்தம்,முன்னாள் மேயர் சாவித்திரி கோபால்,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம்,பால்வளத் தலைவர் காந்தி, கவுன்சிலர் கோபால் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் ராஜமாணிக்கம் பஞ்சாபிகேசன் கவுன்சிலர்கள் கேசவன் தட்சிணாமூர்த்தி வார்டு செயலாளர் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக இருந்த சேகர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்து இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இபிஎஸ் தலைமையில் இணைந்தார், ஓபிஎஸ் ஆதரவாளரான ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கத்தை ஓரம் கட்டும் முயற்சியாக அவருக்கு செக் வைக்கும் வகையில் இபிஎஸ் தலைமையில் வரும் 4 ந் தேதி ஒரத்தநாட்டில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது என நிர்வாகிகளால் கூறப்படுகிறது
